உயர்ந்த வாழ்க்கை மட்டும் தான் ஒரே வழி

உயர்ந்த வாழ்க்கை மட்டும் தான் ஒரே வழி

நாம் பல தீமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு கூட்ட நெரிசலில் வாழ்கிறோம்.

“என்றால் (IF)”, “ஆனால் (BUT)” மற்றும் “ஏன் (WHY)” என்ற வடிவத்தில்.

நமது உடலில் உள்ள நல்லொழுக்கங்கள் மற்றும் தீமைகள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் நாம் சேகரித்து வைத்தது. ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் உடலை வளர்ப்பதற்கு தேவையற்ற தீமைகளைத் துண்டிக்க வேண்டியது அவசியம். “என்றால்”, “ஆனால்” மற்றும் “ஏன்” போன்ற வார்த்தைகள், உடனடியாக வாழ்க்கையில் இருந்து அகற்றப்படாதபோது, ​​வாழ்க்கை முழுவதும் துக்கமாக நம்மை காயப்படுத்தி, நம் வேகத்தை குறைத்துவிடும். இவை கண்களில் உள்ள தூசி போல, எப்போதும் எரிச்சலூட்டும். இது நம் கால்களில் குத்திய முள் போன்றது, எப்பொழுதும் வலி தந்துக்கொண்டெ இருக்கும்.

எனவே, நம் ஆற்றல் குறைவதை தவிர்க்க வேண்டுமென்றால், நம் வாழ்விலிருந்து இந்த களைகளை அகற்ற வேண்டும்.

Milky Way Universe Person Stars Looking Sk

நினைவில் கொள்ளுங்கள்!

எல்லோரும் தங்கள் சொந்த செயல்களின் விளைவை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை. நமக்கு விழிப்புணர்வு இல்லாவிட்டால், நம் துன்பங்கள் நம் வாழ்வின் நல்ல குணங்களைக் கெடுத்துவிடும். நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை ஒரு பரிசு, சோம்பேறித்தனத்திற்கு இங்கு இடம் இல்லை. “உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ளுங்கள்” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். எனவே, உங்கள் தூக்கத்திலிருந்து விரைவில் விழித்துக்கொள்ளுங்கள்.

நமது பிரதான தீமைகளைப் பற்றி கொஞ்சம் ஆராய்வோம்.

உங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள – Click here to watch video

இவை காமம், ஈகோ, பற்றுதல், பேராசை, சுயநலம், கோபம், பொறாமை, சோம்பல், பாரபட்சங்கள், சமநிலையற்ற பார்வை, விரோதம் என்று பலவகைப்படும். தீமைகளால் நிரம்பிய ஒரு நபர் எதிலும் நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறார். அவரது வாழ்க்கை நோக்கம் இல்லாமல் மற்றும் சந்தேகம் நிறைந்ததாக உள்ளது.

கவனமின்மையின் காரணமாக துயரங்கள் நம் வாழ்வில் நுழைகின்றன. அவை நம்மை எல்லையற்ற பாதிப்புக்கு உள்ளாக்கும் முன்பு அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் வாழ்க்கை திகைப்பூட்டுவதற்கு பதிலாக மனச்சோர்வை ஏற்படுத்தும். அதுபோன்ற ஒரு நபர் நிலையற்ற தன்மையுடனும், தன்னம்பிக்கை இல்லாமலும் இருப்பார்.

Astronomy, Space, Moon, Galaxy, Planet

மறுபுறம், நற்பண்பு கொண்ட ஒரு நபர் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்கிறார். ஏனென்றால், நல்லொழுக்கங்கள் என்பது, நகையை அலங்கரிக்கும் முத்துகளைப் போன்றவை. அவை, மென்மையான, ஆரோக்கியமான மற்றும் முற்போக்கான வாழ்க்கையை முடிவு செய்கின்றன. தீமைகளை கைவிடுவதன் மூலம் ஒரு உயர்தர வாழ்க்கையை மனிதன் வாழ முடியும். இரக்கம், சமாதானம், அன்பு, மன்னிப்பு, உறுதிப்பாடு மற்றும் மனநிறைவு ஆகியவை சில  நல்லொழுக்கங்கள். நேர்மறை அணுகுமுறை மற்றும் நம்பிக்கை வாழ்க்கையின் அஸ்திவாரம். நல்லொழுக்கங்கள் நம் குணங்களை வளர்த்து, நம் ஆன்மாவை சுத்தப்படுத்தி, நமது தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையை மதிப்புள்ளதாக அமைக்கிறது.

நல்லவர்கள் பிரபஞ்சத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நியாயமான வழிகளில் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். அவர்கள் இல்லதவர்க்கு உதவி செய்கிறார்கள். அத்தகைய நபர்கள் தங்கள் உரையாடல்களில் மனமகிழும் சொற்களைப் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களின் அணுகுமுறை தூய்மையானது என்பதால், உண்மையான மகிழ்ச்சியும் சமாதானமும் மட்டுமே நிலை கொள்கிறது.

நம் வாழ்வில் இருந்து முற்றிலும் தீமைகளை அகற்ற ஒரே வழி ஒவ்வொரு நாளையும் தூய மனதுடன், ஆற்றலுடன் அணுகுவதாகும். “என்றால்”, “ஆனால்” மற்றும் “ஏன்” ஆகியவற்றை அகற்றுவது நமது வாழ்க்கையிலிருந்து பல மன அழுத்தங்களை அகற்றும்.

Hand, Moon, Space, Night, Fantasy, Sky

பிரபலமான பழமொழி ஒன்றை நீங்கள் மறக்கக்கூடாது,

“நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.”

பிரபஞ்சம் உங்களுக்குள் வாழும்போது, உங்கள் எல்லா செயல்களும் தானாகவே பலப்படுத்தப்படும். பிரபஞ்சம் இந்த விலையுயர்ந்த வாழ்க்கையை நமக்கு கொடுத்திருக்கிறது. நம் நற்பண்புகளாலும், பகுத்தறிவுகளாலும் அதை நாம் உணரவில்லையென்றால், நாம் எதையுமே சாதிக்கவில்லை. நல்ல பண்புகள் நம் வாழ்க்கையை அலங்கரிக்கும்.

எந்த அடிப்படை காரணமும் இன்றி பிரச்சினையை நாம் கவனிக்கக்கூடாது எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. நேரம் வரும் வரை பொறுமையாக காத்திருங்கள். நல்லொழுக்கங்கள் நம் வாழ்வின் மதிப்புமிக்க நகைகள் போன்றவை. நம் சிந்தனைகளின் திசை மாறும் பொழுது, வாழ்க்கையும் மாறுகிறது.

உயர்ந்த, தகுதியான வாழ்க்கைக்கு இந்த பிரபஞ்சத்துடன் இணைந்து செயல்படுவோம்.

Add Comment