கனவெல்லாம் நனவாகும் – சிறப்பு நேர்முக பயிற்சி – 28-04-2018

அன்பர்களுக்கு வணக்கம்,

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த மாதம் நமது முதல் ஒரு நாள் நேர்முக பயிற்சி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதுவரை நடந்த பயிலரங்கங்களில் இருந்து இந்த பயிற்சி முற்றிலும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாங்கள் கலந்து பேசிய அனைவரது கருத்துக்கள் மற்றும் ஏற்கனவே நடத்திய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த கருத்துப்பதிவுகள் அடிப்படையில் ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறீர்கள் என அறிந்து அவற்றை ஒருங்கிணைத்துள்ளோம்.

அந்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முழு நாள் நிகழ்ச்சி 28.04.2018 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.

செயல்வழிக் கற்றல் முறை (Action Based Learning) அடிப்படையிலும், உண்மையில் ஒவ்வொருவர் தேவை தனித்துவமானது, எனவே அதற்கான தீர்வுகளும் தனித்தனியாக தரவேண்டும் என்ற புரிதலினாலும் இந்த பயிற்சி அமைக்கப்பட்டுள்ளது.

ஆழ்மன சக்தியை உபயோகித்து மனப்பயிற்சிகளை செய்யும்போதும், பிரபஞ்ச விதிகளை பயன்படுத்தும் போதும், நாம் தவற விடுவது ஏராளம். அவற்றை சரியாக கண்டுபிடித்து அவற்றை முறையாக சரியான ரீதியில் பயன்படுத்த தெரிந்து கொண்டால், பயன்படுத்தினால் வாழ்க்கை ஒரு அற்புத பரிசாக மாறும். ஒரு இணைப்படைப்பாளியாய் நமக்கு வேண்டுவன நம்மால் படைக்க முடியும்.

இதற்கான ஒரு பயிற்சி நிகழ்ச்சிதான் இது.

Add Comment